
சிறிது நேர பயணத்தில் கோவிலை அடைந்தோம். கோவிலுக்குப் பக்கத்தில் சிறுவர் பள்ளி இருக்கும் என்று நினைக்கிறேன். பள்ளிச் சீருடையில் நிறைய சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை எனவே கேமராவை வெளியில் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். அதுபடியே நாங்களும் நடந்துகொண்டோம்.
ஒரு சிறிய குளத்தில் விஷ்ணு பாம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டு இருப்பது போல் விக்ரஹம் இருந்தது. நுண்ணிய வேலைபாடுகளுடன் அழகாக இருந்தது. விஷ்ணு ஜலத்தில் படுத்த நிலையில் இருந்ததால் இதனை ஜல விஷ்ணு கோவில் என்று நம்மவர்கள் அழைக்கிறார்கள். வயதில் சிறியவர்கள் சிலைமீது நடந்து சென்று பூக்கள் வைக்க அனுமதிக்கப் படுகிறார்கள். சிலர் தச்சனைகளை அங்குள்ள குளத்திலும், விக்கிரத்தின் மீதும் இடுகிறார்கள்.
சிறிய கோவில் என்பதால் சீக்கிரமே தரிசனம் முடித்து வெளியில் வந்தோம். வரும் வழியில் கோவிலில் நேபாளிகள் இருவருக்கு எளிய முறையில் கல்யாணம் நடந்துகொண்டு இருந்தது. குழுவில் வந்திருந்த சிலர் அவர்களின் அருகில் சென்று வாழ்த்து தெரிவித்தார்கள். அங்கிருந்து புறப்படும் போது வினோத் என்னிடம் "கேமரா எங்கடா" என்று கேட்டன். "நீ என்கிட்ட கொடுக்கலையே, எங்கடா மிஸ் பண்ணன்னு" கேட்டேன். உடனே எங்கயோ தேடிப்போய் எடுத்துக்கொண்டு வந்தான்.. நல்ல வேலை அவன் வைத்த இடத்திலேயே இருந்தது. இல்லையெனில் நிறைய புகைப்படங்களை இழக்க நேரிட்டு இருக்கும்.
நல்ல வேலை கேமரா கிடைத்தது...இல்லையெனில் வினோத் என்னை கொலை செய்து போட்டு இருப்பான். பசுபதிநாத்திடம் மோச்சம் வாங்கி இருப்பேன்.
No comments:
Post a Comment