
இன்னொரு வழியில் செல்ல வேண்டுமெனில் 200 படிகள் இறங்கி ஏற வேண்டும். இதைக் கேட்ட நண்பர் தமிழ் பாதியிலேயே கழண்டுவிட்டார். இவ்வளவுதானா என்று இருவர் மட்டும் சென்றோம். முப்பது படிகள் கூட ஏறவில்லை எங்கள் இருவருக்கும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. முன் வைத்த காலை பின்வைப்பதில்லை என்ற முடிவுடன் முன்னோக்கி நடந்தோம். 15 நிமிடங்கள் படிகள் ஏறி தொங்கு பாலத்தை அடைந்தோம்.
பாலத்தை இரும்பினால் செய்திருந்ததால் பலமாக இருந்தது. நீண்ட நேரம் அங்கு இருந்துவிட்டு படிகளை ஏற பலமில்லாமல், ஒவ்வொரு படியாக தாங்கி தாங்கி ஏறி வந்தோம். அம்மன் கோவிலுக்கு சென்றிருந்த பயணிகள் திரும்பி வரவும், நாங்கள் அங்கு செல்லவும் சரியாக இருந்தது. இங்கிருந்து காத்மண்டு நோக்கி பயணமானோம்.
பயணிப்போம்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.
No comments:
Post a Comment