
மனக்கமான மலைக்கோவிலுக்கு கேபிள் கார் மூலம் 20 நிமிடங்கள் பயணம் செய்து அம்மன் கோவிலை அடைந்தோம். கேபிள் காரில் போகும்போது காது அடைத்துக்கொள்கிறது. ரோப் காரில் சில இடங்களில் செங்குத்தாக செல்லும்போது மலையும் அதற்கு நடுவில் ஓடும் ஆறும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
பண்டிகை காலம் என்பதாலும் கூட்டம் அதிகமாக இருந்ததாலும் மூலவரை சென்று தரிசிக்கவில்லை. மற்றபடி கோவிலை சுற்றியுள்ள பலியிடங்களை பார்க்க நேர்ந்தது. இங்கு ஆடு, கோழிகளை நேர்த்திக்கடனாக அம்மனுக்கு பலியிடுகிறார்கள். கோவிலை ஒட்டிய பல கடைகளிலும் பீர் கிடைக்கிறது. சிலர் குடும்பமாக வந்து சாப்பிடும் போது பீரையும் உடன் வாங்கி குடிக்கிறார்கள். குழந்தைகளுக்கும் குறைந்த அளவில் குடிக்க கொடுக்கிறார்கள். நாங்கள் வெறும் தேனிர் மட்டும் அருந்திவிட்டு திரும்பி வந்துவிட்டோம்.
You tube link: http://in.youtube.com/watch?v=byIft23G7FM&feature=related
பயணிப்போம்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.
No comments:
Post a Comment