
கோட்டையின் மதில் சுவர்களில் சில செடிகள் காணக்கிடைக்கின்றன. இது கோட்டையின் ஆயுளை குறைக்க வழியுள்ளது. ராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த நிலை ஆச்சர்யத்திற்குறியது. பல நூறு வருடஙகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்ட இதுபோன்ற கட்டிடங்கள் சிதைவதை வேடிக்கை பார்ப்பது இந்திய வரலாற்றின் சிதைவை பார்பதற்க்கு சமம்.
இந்த கோட்டையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அநுமன் கோவில் உள்ளது. இங்கு அநுமன் படுத்த நிலையில் காணக்கிடைக்கிறார். அதைத் தொடர்ந்து சென்றால் ராம, லட்சுமண, சீதை காட்சி தருகிறார்கள்.
இங்கிருந்து பார்த்தால் சங்கர மடத்திற்கு சொந்தமான கட்டிடம் தெரிகிறது. நேரமின்மையால் அங்கு செல்லாமல் தங்கியிருந்த இடத்திற்கு திரும்பவேண்டியதாக இருந்தது.
பயணிப்போம்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.
No comments:
Post a Comment