
இடையில் நாங்கள் சென்ற வழி முழுவதும் சமீபத்தில் பெய்த மழையால் சேதமடைந்து இருந்தது. பெரியதாக எந்த வசதியும் இல்லாத இந்த வழியை ஏன் தேர்வு செய்தார்கள் என்பது குழப்பமாகவே இருந்தது. பயணத்தில் எங்களுடன் வந்த ஒரு சிலரை தவிர அனைவரும் 40 வயதை கடந்தவர்கள். அவர்களை உடன் அழைத்துக் கொண்டு இந்த வழியாக சென்றது சிறிது நடுக்கமாகத்தான் இருந்தது.
மாலை நேரத்தில் போகும் வழியில் தேநீர் அருந்த கூட வசதியில்லாத வழியாக இருந்தது. இரவு 7 மணிக்குள் சென்று சேர்ந்துவிடலாம் என்று நம்பிக்கையுடன் கூறினார்கள். பகலில் பயணம் செய்திருந்தால் பரவாயில்லை. இரவு நேரத்தில் ஒரு சிறு வெளிச்சம் கூட கண்களுக்கு தெரியாத சாலைகளின் வழியே பயணம் செய்தது சங்கடமாகவே இருந்தது.
நேபாள எல்லையை தாண்டி செல்ல ஒரு நபருக்கு 100 வீதம் அனைவரும் பணம் செலுத்திய பின்னரே உள்ளே செல்ல முடிந்தது. சிறிய சுவருடன் கூடிய வளைவு மட்டுமே எல்லையை பிரிக்கிறது. இந்திய எல்லையான சொனாலியிலும், நேபாள எல்லையான பட்வாலிலும் பல கடைகள் இருக்கின்றன.நாங்கள் நீண்ட பயணம் செய்து பின்னிரவில் இங்கு வந்ததால் நேராக ஹோட்டல் அறைக்கு ஓய்வெடுக்க சென்றுவிட்டோம். ஹோட்டல் அறைகள் நன்றாக இருந்தாலும் ஈசல்கள் அதிகமாக தொல்லை செய்தன.
இரவு சாப்பாடு நீண்ட நேரம் கழித்து தான் பரிமாரப்பட்டது. இதனால் டூர் மேனேஜருக்கும் பயணிகளுக்குமிடையில் சிறிதாக விவாதம் வந்தது. நாளைய தினம் சித்தார்தர் பிறந்த இடத்தைக் காண அனைவரும் செல்வதர்க்காக உறங்க சென்றனர்.
பயணிப்போம்,
கிருஷ்ணப்பிரபு,
சென்னை.
கிருஷ்ணப்பிரபு,
சென்னை.
No comments:
Post a Comment