
இவ்வளவு நாள் மன்னராட்சியில் இருந்த நேபாள் முதன்முறையாக மக்களாட்சியின் மூலம் அரசை கைப்பற்றியுள்ளது. அதுவும் காயத்ரி பூஜை நேரம் என்பதால் விழாக்கோலமாக இருந்தது. கோவில்களின் வடிவமைப்பு நம்மிலிருந்து வேறுபட்டிருப்பதால், கோவில்களில் தான் இருக்கிறோம் என்ற உணர்வு எனக்குள் இல்லாமல் இருந்தது. எனக்கு சிவனை பார்க்கும் பொழுதுதான் கோவில் என்ற உணர்வே வருகிறது. மற்றபடி சுற்றுலா இடமாக மட்டுமே பார்க்கமுடிகிறது.
எந்த கோவிலுக்கு சென்றாலும் 5 நிறங்களையுடைய துணிகளில் ஏதோ எழுதி தோரணம் போல் தொங்குவதை பார்க்க முடிந்தது. யாரிடம் கோட்டாலும் இதற்கான பதில் கிடைக்கவில்லை.
சுமார் அரை மணி நேர தரிசணத்திற்கு பிறகு இங்கிருந்து புகழ்பெற்ற தேவின் அருவி மற்றும் குப்தேஸ்வர் குப்தா என்ற குகை கோவிலுக்கு புறப்பட்டு, வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளின் வழியே பயணம் செய்து தேவின் அருவியை அடைந்தோம்.
பயணிப்போம்,
கிருஷ்ணப் பிரபு,
சென்னை.
No comments:
Post a Comment