Sunday, February 22, 2009

Mount Everest,Sagarmatha, Himalaya range

எங்களை சுமந்து கொண்டு பறந்த குட்டி விமானம் சிறிது நேரத்திற்கெல்லாம் சிகரங்கள் இருக்கும் பகுதியை அடைந்தது. விமானத்துல இருந்து காத்மண்டு நகரத்த பார்க்க அழகா இருந்தது. சின்னதும் பெரிசுமா 1300 சிகராங்களுக்கு மேல இங்க இருக்குன்னு சொன்னாங்க. அதுல ஒன்னு தான் உலகத்துலேயே உயரமான எவரஸ்ட் சிகரம். இந்த சிகரத்த சகர்மதான்னும் சொல்லுறாங்க. சில பேர் சாதனைக்காக நடந்தே சிகரத்தை அடையறாங்க.

எனக்கு சமீபத்துல Aerostress வந்ததுமே நான் கேட்ட முதல் கேள்வி "இங்க இருந்து கைலாய மலை தெரியுமா?"-ன்னு தான்.

"மன்னிக்கணும், நாம அந்த பக்கமா இப்ப போகல, எவரஸ்ட்டதான் பார்க்க போறோம்", அப்படின்னு சொல்லிட்டு போனாங்க. நான் கேட்ட கேள்வி கிறுக்கு தனமானதுதான் இருந்தாலும் அவல கூப்பிட்டு "ஏ பொண்ணு கைலாய மலை இருக்க பக்கத்தையாவது சொல்லிட்டு போ...ஒரு கும்பிடு போட்டுக்குவேன்ல! " அப்படின்னு சொல்லணும் போல இருந்தது.

பல சிகரங்களோட பெயர சொல்லி அதுதான் இதுதான்னு காமிச்சாங்க. எந்த பெயருமே மனசுல நிக்கல. கடைசியா ஓர் இடம் வந்தவுடன் இதுதான் எவரஸ்ட்டுன்னு சொன்னாங்க. உடன் வந்திருந்த வெளிநாட்டு பயணிகள் Seat belt -ஐ கழட்டிவிட்டு சந்தோஷத்துல துள்ளி குதிச்சாங்க. வந்திருந்த பயணிகளில் ஒரு பெண் என்னிடம் பிலிபைன்ஸ் மொழியில என்னமோ சொன்னாங்க. ஆரம்பத்துல எனக்கு எதுவுமே புரியல. போட்டா பெஔத்ய்புல் ஹா...(மறுபடியும் மறுபடியும் சொன்னதையே) இதுதான் காதுல விழுந்தது. Yeah its very beautiful -னு சொன்ன பிறகுதான் சந்தோஷமா போனாங்க.

எவரஸ்ட் கிட்ட வந்ததுமே ஒவ்வொரு பயணியையும் தனித்தனியா பைலட் ரூமிற்கு அழைத்துச் சென்று அங்க இருந்து பார்க்க அனுமதிச்சாங்க. அந்த இடத்துல எந்த பக்கம் பார்த்தாலும் பச்ச, மஞ்சா, செகப்பு -ன்னு பல நிரங்கள்ள பொத்தான்களா இருந்தது. தடுமாறியதால் என்னையும் அறியாமல் கை பொத்தான்களின் பக்கம் சென்றது. உடனே கையை தட்டி விட்டு என்னையும் பிடித்துக்கொண்டார்கள். கொஞ்ச நேரத்துல அங்க இருந்து போக சொல்லிட்டாங்க.

எங்களுடைய எவரஸ்ட் பயணத்தை Youtube -ல் கான இங்கு செல்லவும். http://www.youtube.com/watch?v=8ymlxCJyrfM

சிறிது நேரத்தில் அங்கிருந்து போக்ரா விமான நிலையத்திற்கு சென்று அங்குள்ள பயணிகளை அழைத்துக் கொண்டு காத்மண்டு செல்லப் போவதாக அறிவிப்பு வந்தது.

பயணிப்போம்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.