29-09-2008 அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்தபின் மாலை 4.30 மணிக்கு அனைவரும் பயணியர் விடுதிக்கு திரும்பினோம். இன்று இரவு இங்கு தங்கப்போவதால் பயணிகள் கடைகளுக்கு சென்று வர அனுமதிக்கப்பட்டனர். அவரவருக்கு பிடித்த பொருட்களை வாங்குவதற்காக அனைவரும் வெளியில் சென்றுவிட்டனர்.
பெரும்பாலான கடைகளில் குளிர்கால ஆடைகள் கிடைக்கின்றன. முக்கியமாக அனைத்து கடைகளிலும் ஆல்கஹால் மற்றும் பீர் வகைகள் கிடைக்கின்றன. நானும் எதையாவது வாங்களாம் என்று பல கடைகளுக்கு சென்றேன். எதையும் வாங்குவதற்கு பிடிக்காததால் ஒரு புத்தக கடைக்கு சென்றேன். அங்கு learn Japanese என்ற புத்தகம் காணக்கிடைத்தது. எதற்கும் பயன்படுமென்று வங்கிக்கொண்டு வந்தேன்.
இங்கு மலை ஏறுவதற்கு பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். மூலிகை மசாஜ் செய்துகொள்ள அவர்கள் ஆர்வமுடன் செல்கிறார்கள்.எனக்கு கழுத்தில் சுளுக்கு இருந்ததால் நானும் சென்றேன். ஆனால் நேரமின்மையால் அங்கு செல்லமுடியாமல் போனது.
இரவு 7 மணிக்கு வெளியில் சென்று திரும்பும் போது மழை ஆரம்பித்தது. மழை நிற்கவே இல்லை. ஆதலால் குடைவாங்கி கொண்டாவது ஹோட்டலுக்கு திரும்பலாமென்று விலை கேட்டால் 180 ரூபாய் என்று சொன்னார்கள். சென்னையில் அதே குடை 80 ரூபாய்கு கிடைக்கும். இரவு உணவுக்குப்பின் அனைவரும் உறங்கச் சென்றோம்.
பயணிப்போம்,
கிருஷ்ணப் பிரபு,
சென்னை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment