Saturday, January 10, 2009

Hanging bridge in nepal

மனக்கமானா கோவிலுக்கு சென்று வேகமாக திரும்பி வந்துவிட்டதால் பக்கத்திலுள்ள தொங்கு பாலத்திற்கு சென்று வர நானும் வினோத்தும் ஆசைப்பட்டோம். எங்களுடன் நண்பர் தமிழும் உடன் வந்தார். முதலில் குறுக்கு வழியில் செல்ல நினைத்து ஒரு பாதையில் சென்றோம். போகும் வழியில் புதராக இருந்தது. ஒரு இடத்தில் பன்றிகளை பார்த்து பயந்துவிட்டோம். எதிரில் வந்தவர் இந்தவழியில் போக முடியாது என்று எச்சரித்தார். நாங்கள் அவரை மீறி சென்றோம். சுற்றி சுற்றி வந்து அவரின் எதிரிலேயே வந்து நின்றோம். அவர் எங்களை பார்த்து கேலியாக சிரித்தார். இது எல்லாம் எங்களுக்கு பழக்கம் சாமியோன்னு தமிழில் சொல்லிவிட்டு வேறு வழியாக செல்ல நினைத்து வெளியில் வந்தோம்.

இன்னொரு வழியில் செல்ல வேண்டுமெனில் 200 படிகள் இறங்கி ஏற வேண்டும். இதைக் கேட்ட நண்பர் தமிழ் பாதியிலேயே கழண்டுவிட்டார். இவ்வளவுதானா என்று இருவர் மட்டும் சென்றோம். முப்பது படிகள் கூட ஏறவில்லை எங்கள் இருவருக்கும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. முன் வைத்த காலை பின்வைப்பதில்லை என்ற முடிவுடன் முன்னோக்கி நடந்தோம். 15 நிமிடங்கள் படிகள் ஏறி தொங்கு பாலத்தை அடைந்தோம்.

பாலத்தை இரும்பினால் செய்திருந்ததால் பலமாக இருந்தது. நீண்ட நேரம் அங்கு இருந்துவிட்டு படிகளை ஏற பலமில்லாமல், ஒவ்வொரு படியாக தாங்கி தாங்கி ஏறி வந்தோம். அம்மன் கோவிலுக்கு சென்றிருந்த பயணிகள் திரும்பி வரவும், நாங்கள் அங்கு செல்லவும் சரியாக இருந்தது. இங்கிருந்து காத்மண்டு நோக்கி பயணமானோம்.

பயணிப்போம்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.

No comments: