Tuesday, April 21, 2009

Nepal to India - Razcal journey

02-10-2008: வினோத்தின் அம்மாவும் நானும் எப்பொழுதுமே காலையில் சீக்கிரமாக தயாராகி விடுவோம். வினோத் கடைசி நிமிடத்தில் தான் தயாராவான். வினோத்தின் அத்தை சூரியன் உதிக்கும் முன்பே எழுந்து எங்காவது தெரிந்தவர்களின் அறைகளுக்குச் சென்றுவிடுவார்கள். ஆனால் வரும் போது குளித்து முடித்து தயாராக இருப்பார்கள்.

நான் சற்றே அறையை விட்டு வெளியில் வந்து என்னுடைய குழுவினர் எதிர்படுகிறார்களா என்று நோட்டம்விட்டேன். பள்ளிச் சிறுவர்களில் சிலர் தூக்கக் கலக்கத்துடன் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். பெரிய வகுப்பு மாணவர்கள் சிறிய வகுப்பு மாணவர்களை தாதாக்களைப் போல் வேலை வாங்கிக்கொண்டு இருந்தார்கள். ஒரு அறையின் முன்பு சில மாணவர்களும், ஆசிரியர்களும் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தார்கள். எவ்வளவு தட்டியும் உள்ளிருந்து யாருமே கதவைத் திறக்கவில்லை. நீண்ட முயற்சிக்குப் பின்பு இரண்டாவது படிக்கும் நான்கு மாணவர்கள் கண்களைக் கசக்கிக் கொண்டு கதவைத் திறந்தார்கள்.

"இவங்கள யாருடீ தனியாவிட்டது" -ன்னு ஒரு ஆசிரியை சக ஊழியரிடம் குறை பட்டுக் கொண்டார்.

நான் அவர்களுக்கு புன்னகை செய்துவிட்டு அறைக்குத் திரும்பி உடைமைகளை தயார் செய்வதில் துரிதமானேன். சிறிது நேரத்தில் டூர் மேனேஜர் எல்லோருடைய அறை வாசல்களிலும் வந்து தயாராக இருக்கும் படி சொல்லிவிட்டுச்சென்றார்.

காலை உணவை முடித்துவிட்டு அங்கிருந்து இந்தியாவிலுள்ள ரஸ்கலுக்குப் புறப்பட தயாரானோம். எனக்கு காத்மண்டு சென்னையைப் போல் தான் தோன்றியது. வெயில் கூட சற்று அதிகம் என்றே சொல்லுவேன்.

எங்கள் விடுதியை விட்டு பத்து நிமிடப் பயணம் செய்திருந்தோம். சென்னையில் உள்ளது போல் வாகன நெரிசலை சந்திக்க வேண்டியிருந்தது. ஏற்கனவே மலையில் செல்லும் பயணம் வாகன வேகத்தை மட்டுப்படுத்தியிருந்தது. இதில் வாகன நெரிசல் வேறு எரிச்சல் படுத்தியது.

வண்டி மிகவும் குறைவான வேகத்தில் சென்றதால் நாங்கள் வண்டியை விட்டு கீழிறங்கி நடந்து சென்றோம். வண்டியில் உள்ள பெரியவர்கள் எங்களைக் கோபிக்கவே நாங்கள் மீண்டும் வாகனத்தில் ஏறிக்கொண்டோம்.

ஒரு இடத்தில் வண்டிகள் நின்று நின்று சென்றுகொண்டிருந்தன. இரு சக்கர வாகனத்தில் சென்ற புதிதாக மணமுடித்த தம்பதிகள் லாரி மோதி இறந்திருந்தார்கள். அந்த விபத்து நெஞ்சை உறைய வைப்பதாக இருந்தது. அதனால் தான் வழி நெடுகவும் வாகன நெரிசலை சந்திக்க நேர்ந்தது. ஐயோ... இது தெரியாமல் குறைபட்டுக் கொண்டோமே என்று வருத்தமாக இருந்தது.

அதற்கு மேல் வண்டி வேகம் எடுத்தது. மதியம் எதோ ஒரு ஊரில் நிறுத்தினார்கள். அங்கு காஞ்சி மடம் பஜனைக்கான மண்டபம் கட்டிக் கொடுத்திருந்தார்கள். திருவிழா சமயம் என்பதால் கூட்டம் வேறு நடந்துகொண்டிருந்தது. தண்ணீர் வசதியெல்லாம் கூட இருந்தது. சரி இங்கேயே போஜனம் முடித்துப் புறப்படலாம் என்றால் அவர்கள் அதற்குச் சம்மதிக்கவில்லை.

சாலைக்குப் பக்கத்திலிருந்த குட்டிச்சுவரில் அமர்ந்து மதிய உணவை முடித்துக் கிளம்பினோம். சில மணிநேரம் பயணம் செய்து இந்திய எல்லையை அடைந்தோம். பார்க்குமிடமெல்லாம் ஏழ்மை தாண்டவமாடுகிறது. சாலையோரங்களில் பெயரளவிற்குக் கூட சுத்தம் இல்லை. இன்னும் கூட அவர்களின் வாழ்கைத் தரம் உயரவில்லை.

வழிநெடுக இது போன்ற காட்சிகளையே பார்த்துக் கொண்டு நாங்கள் தங்க வேண்டிய பயணியர் விடுதிக்கு இரவு 8 மணிக்குச் சென்றோம். பிறகு சமைத்து எங்களுக்கு இரவு சமையல் படைத்தார்கள். எங்கள் யாருக்குமே தங்கும் விடுதி பிடிக்கவில்லை.

நாங்கள் தங்கிய அறையில் ஒரு வெளிநாட்டவரும் தங்கியிருந்தார். அவர் எங்களுக்கு முன்பே அங்கு தங்கியிருந்தார். எங்களுடன் வந்த குட்டிக் குழந்தை காவ்யாவின் பாட்டி சத்தமாக பேசிக்கொண்டிருந்தார். வெளிநாட்டவருக்கு அது எரிச்சலை ஏற்படுத்தியிருக்க வேண்டும். எங்களிடம் வந்து சத்தம் போடாமல் பேசுங்கள் நான் நாளை காலை சீக்கிரம் புறப்பட வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்தார். தவறாக நினைத்த பாட்டி அவரை சண்டைக்கு இழுத்தார்கள். அவரும் ஏதேதோ திட்டினார். இருவருக்குமிடையே வாக்கு வாதம் முற்றியது.

வினோத்தின் அம்மா தலையிட்டு "வெளிநாட்டவர் நம் நாட்டைப் பற்றி என்ன நினைப்பார்" என்று பாட்டியை சமாதானப்படுத்தினார். காலையில் புத்த காயாவிற்குப் புறப்பட வேண்டுமென்பதால் அனைவரும் உறங்கச்சென்றோம்.

5 comments:

இது நம்ம ஆளு said...

அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

Prabhu said...

ஒரு ப்ளாக் முழுக்க போடுற அளவா பயணிச்சிருக்கீங்க!

Prabhu said...

என்ன கொரும சார் இது! நான் புது போஸ்டிங் போட்டா அப்டேட் ஆகல, பதிவ டைப் பண்ணவே கஷ்டப் பட்டுட்டேன், எடிட்டும் சரியா வேல செய்யாம தப்பும் தவறுமா ஒரு பதிவு வெளியீடு. ஐயகோ! வைகைக்கரைத் தமிழை அணை போட்டு த்டுத்துவிட்டார்களே! இந்த ப்ளாக்கரே இப்படித்தான்! எப்படி சரி செய்யுறது? ஹெல்ப் மி?

ஒய்?...ஒய்?....ஒய்?

ஓஓஓஒய்ய்ய்ய்....மீஈஈஈஈஈஈ?

Unknown said...

நன்றி திரு கிருஷ்ண பிரபு,

//மேலும் மதம், சாதி போன்ற அமைப்புகளும் ஒரு குழுவாக வாழத்தானே தோற்றுவிக்கப்பட்டது.//

இந்த கருத்தை ஏற்று கொள்ள முடியவில்லை கிருஷ்ண. ஒவ்வொரு இனமும் தனி குழுவாக வழலாமே ஒழிய அந்த இனத்தில் பாகுபாடு என்பது ஏற்று கொள்ளமுடியாது. உதாரணத்திற்க்கு தமிழ் பேசும் அனைவரும் ஒரு குழுவாக வாழலாமே தவிர அதில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்த சாதி இருக்ககூடாது.

நீங்க கேட்கலாம் ஒவ்வொரு இனமும் குழுகளாக இருக்கும் போது சாதி ஏன் இருக்ககூடாதென்று. ஏன்னென்றால் சாதியில் உள்ள பாகுபாடு இனத்தில் இல்லை அது மட்டும் இல்லாமல் இனம் என்பது ஒரு முழு சமுகத்தை குறிக்கும் ஆனால் சாதி ஒரு சமுகதிற்க்குள்ளே பல பாகுபாடு உருவாக்குகிறது.


//ஒரு குழந்தை சினிமாவைப் பார்த்து கெட்டுப்போகிறது என்றால் நம்பலாம். சுய அறிவுள்ள ஒருவர் கனவுத் தொழிற்சாலையைப் பார்த்து கெட்டுப் போவது நம்ப முடியாத ஒரு விஷயம். அப்படி நம்பித்தான் ஆகவேண்டுமெனில் சினிமாதான் கெடுக்கிறது எனில் அது சினிமாவால் அல்ல. தனி மனிதனுக்கு ஒழுக்கம் இல்லாததால்.தனிப்பட்டவனுடைய சபல மனதால்...//

ஒரு மனிதனுக்கு தனிமனித ஒழுக்கம் என்பது எப்போது உருவாகிறது?
நான் அறிந்தவரை குழந்தை பருவத்திலிருந்தே அந்த குழந்தை பார்கின்ற சமுகம், பெற்றோர், சூழ்நிலை இவையாவும் தனிமனித ஒழுக்கத்தை நிர்னைப்பதாக நினைக்கிறேன். அப்படியென்றால் கட்டாயம் சினிமா தனிமனித ஒழுக்கத்தை பாதிக்கிறது (எந்த அளவு என்பதே வேறுபடுகிறது).



//சினிமாவிற்கும் தொலைக்காட்சிக்கும் பெரிய வித்யாசம் இல்லை.//

கண்டிப்பாக வித்யாசம் இருக்கிறது ஏன்னெறால், தினமும் சினிமா பார்பவர்களை காண்பது அரிது. ஆனால் தொலைகாட்சியை அனைவரும் ஒரு நாளில் ஒரு முறையாவது பார்கிறோம். அதானால் தொலைகாட்சியின் பாதிப்பு சினிமாவைவிட அதிகம்.


//மதம் நிச்சயமாக கலாச்சாரத்தை சீரழிக்காது. கலாச்சாரத்தை காப்பாற்றுகிறோம் என்ற போர்வையில் அது சமூகத்தை வேண்டுமென்றால் சீரழிக்கலாம். அப்படித்தானே நடக்கிறது.//

இதற்க்கு பதில் நீங்க எழுதிய முதல் பத்தையை மறுபடியும் படிங்க.

//இன்று சாதிய முறையை அழிக்க வேண்டுமென்கிறார்கள். ஆனால் பள்ளிக்கூடத்தில் சேரும்போது அதனைக் குறிப்பிட வேண்டுமென்கிறார்கள்.ஆகவே சாதியம் கலாச்சாரத்தைக் கெடுக்கிறது எனில் அதற்கான முக்கிய பங்கு கல்வி சார்ந்த அமைப்புகளுக்கு உண்டு. கல்வித் துறை அரசியலை சார்ந்துள்ளதால் அரசியல் வாதிகளுக்கும் அதில் ஒரு பங்கு உண்டு.//

கல்வியில் சாதியை குறிப்பிட சொல்வதின் நோக்கம்: அனைவருக்கும் சமமான நிலை வரவேண்டும் என்பதால், உங்களுக்கு எந்த சலுகையும்/அடையாளமும் வேண்டாம் என்றால் குறிப்பிட தேவையில்லை. அதுமட்டும் இல்லாமல் இன்றைய நிலையில் கலப்பு திருமனம், சுய மரியாதை திருமணம் எல்லாம் அரசு அங்கிகாரம் பெற்றது தானே அங்கே எந்த சாதியை குறிப்பிடுவீர்கள்.


//ஒழுங்கான கல்வி கலாச்சாரத்தைக் கெடுக்காது.//

சரியாக புரிய வில்லை ஒழுங்கான கல்வியா இல்லை ஒழுக்கத்துடன் கூடிய கல்வியா?


//சுய கலாச்சாரத்துடன் மாற்று கலாச்சாரத்தை தொடர்புபடுத்தும் போதுதான் பிரச்சனையே. அந்தத் தொடர்பு படுத்துதல் வேண்டுமெனில் கலாச்சாரத்தைக் கெடுக்கலாம்.//

அப்படியென்றால் ஒப்பீடு என்பதே கூடாது என்கிறீர்களா. நீங்கள் நினைத்து கொண்டிருக்கும் கலாசரமும் பல கலாச்சாரத்தின் பாதிப்பில் வந்ததுதானே.


//அனால் அது மெத்தப் படித்த தனி மனிதனின் ஒழுக்கக்கேடினால் விளைவது.//

அப்போ ஒழுக்கத்திற்க்கும் கல்விக்கும் தொடர்பில்லைன்னு சொல்றீங்களா?


//வேறு எதைக் காட்டிலும் தனி மனித ஒழுக்கம் இல்லையெனில் குடும்பத்திலிருந்து, சுற்றத்திலிருந்து சமுதாயத்திலிருந்து, கலாச்சாரத்திலிருந்து அனைத்துமே கெடும் என்பது என்னுடைய கருத்து.//

இவை அனைத்தும் அல்லவா தனிமனித ஒழுக்கத்திற்க்கு பாதிப்பை ஏற்படுத்துவது.


//என்னையும் உங்களுடைய கருத்துப் பரிமாற்றத்திற்கு அழைத்ததற்கு நன்றி ராஜேந்திரன் பிரதாப். ஆமாம் இதுதானே உங்களுடைய பெயர்.//

நன்றி திரு கிருஷ்ண பிரபு, என் பெயர் பிரதீப்.

sankarkumar said...

thank you sir
sankarkumar