Wednesday, October 22, 2008

Ananda bhavan, Swaraj bhawan

நேரு குடும்பத்தின் பூர்வீக இல்லமான ஆனந்த பவன் மற்றும் ஸ்வராஜ் பவன் அலகாபாத்திலுள்ள முக்கிய சுற்றுலா இடமாகும். ஆனந்த பவனில் மோதிலால் நேரு, ஜவஹலால் நேரு ஆகியோர் பயன்படுத்திய அறைகள் கண்ணாடி பேழைகளால் தடுக்கப்பட்டுள்ளது. அறையினுள் அவர்கள் பயன்படுத்திய படுக்கை மற்றும் மேஜைகள் உள்ளன. ஜவஹர் பயன்படுத்தியப புத்தகங்கள் மற்றும் தன் கைப்பட எழுதிய சில கடிதங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனந்த பவனுக்கு அருகிலுள்ள ஸ்வராஜ் பவன் 1930-ல் மோதிலால் நேருவால் தேசிய இந்திய கங்ரசுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. இங்குதான் இந்திரா காந்தி பிந்தாராம்.

இந்திய விடுதலை போராட்டத்திற்காக எடுக்கப்பட்ட பல முடிவுகள் இங்குதான் எடுக்கப்பட்டதாம். அதற்காக காந்தி அலகாபாத் வரும்போதெல்லாம் ஆனந்த பவனில் தான் தங்குவாராம். அவர் பயண்படுத்திய அறையும் கண்ணாடி பேழையால் தடுக்கப்பட்டுள்ளது.

ஆனந்த பவனை இந்திரா காந்தி 1970-ல் நாட்டிற்கு அர்பணித்தாராம். அது முதல் இந்த இடம் அருங்காட்சியகமாக அரசால் பராமறிக்கப்படுகிறது. பள்ளிக் குழந்தைகளின் அறிவியல் மற்றும் கல்வி பயன்பாட்டிற்கான Jawahar Lal Nehru planetarium இங்கு உள்ளது. ஆனந்த பவனுக்கு வெளியிலுள்ள பூங்காவில் பயணிகள் அமர கல் மேடை உள்ளது.

ஆனந்த பவனை சுற்றி பார்க்க நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உள்ளே சென்று புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. குழந்தைகள் வாங்குவதற்கான அறிவியல் பொருட்களும் இங்கு கிடைக்கிறது.

பயணிப்போம்,
கிருஷ்ணப்பிரபு,
சென்னை.

No comments: