Thursday, October 23, 2008

Prince Siddhartha Gautama's desire

தினமும் ஒரே வழியில் சென்ற சித்தார்தருக்கு தான் பிறந்த லூம்பினியை பார்க்க ஆசை வந்ததாம். ஆகவே சந்தனா தேரை கிழக்கு வாசல் வழியாக செலுத்து நான் லூம்பினி போகவேண்டும் என்றாராம். சந்தனன் எவ்வளவோ போராடியும் பலனில்லை, அரண்மனையின் கிழக்கு வாசல் வழியாக தேரை ஒட்டினானாம். எதிரில் தலை வெளுத்து, எலும்புகள் தெரிய ஒரு வயோதிகன் வந்தானாம்.

(சி-சித்தார்தன், ச- சந்தனன்)  

சி: ஏன் சந்தனா இவன் இப்படி இருக்கிறான்? 
ச: நமக்கு ஏன் அரசே அது! வாருங்கள் அரண்மனைக்கு திரும்பலாம்.  
சி: இல்லை எனக்கு பதில் சொல், ஏன் அப்படியிருக்கிறார்?  
ச: வயோதிகம் அரசே, இது அனைவருக்கும் வரும்.  
சி: அப்படி என்றால் நமக்குமா?  
ச: ஆம் அரசே.  
சி: இவ்வளவு தானா வழ்க்கை.அப்படி என்றால் தேரை அரண்மனைக்கு திருப்பு.  

சரி வடக்கு வாசல் வழியாக தேரை செலுத்து. இங்கு பிச்சைக்காரன் எதிரில் வந்தானாம்.

சி: இவன் யார் சந்தனா, ஏன் இப்படி வருகிறான்... இதுவரை நான் இது போல் பார்த்ததில்லையே?  
ச: அதுவா அரசே! பிச்சை எடுத்து உண்பவர்கள். 
சி: அப்படி என்றால்?  
ச: பிழைப்பதற்கு வழியில்லாதவர்கள் அரசே.  
சி: இப்படியும் நடக்குமா வழ்க்கையில்?  
ச: ஆம் அரசே. 
சி: இவ்வளவு தானா வழ்க்கை.அப்படி என்றால் தேரை அரண்மனைக்கு திருப்பு.

சரி மேற்கு வாசல் வழியாக தேரை செலுத்து சந்தனா. இங்கு பிணியுடையவனை சூழ்ந்து கொண்டு சிலர் அழுது  ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்களாம்.

சி: இது என்ன சந்தனா?  
ச: அதுவா அரசே, அவன் சிறிது நேரத்தில் மரணமடையப்போகிறான். அதற்குப் பிறகு அவனால் இவர்களுடன் பேச முடியாது.அதற்கு தான் அழுகிறார்கள்.  
சி: அப்படியென்றால் இந்த வாழ்க்கையில் எல்லாம் அழியக்கூடியதா...
ச: ஆம் அரசே. 
சி: பிறகு எதற்கு இந்த தேவையில்லாத களிப்பு.

கடைசியாக கிழக்கு வாசல் வழியாக தேரை செலுத்தினான் சந்தனன். இங்கு தலைமுடி மழித்த பிட்சு திருவோடேந்திக்கொண்டு, முகத்தில் அமைதி தழுவ வந்து கொண்டிருந்தானாம்.  

சி: இவன் யார் சந்தனா, இவ்வளவு அழகாக இருக்கிறானே?  
ச: அவனைப் பற்றி நமக்கெதற்கு அரசே, வாருங்கள் அரண்மணைக்கு செல்லலாம்.  
சி: இல்லை அவர் யாரென்று சொல்?  
ச: அரசே...அவர் புத்த பிட்சுக்களில் ஒருவர், எளிமையான வாழ்க்கை வாழ்பவர்கள். ஞானத்தை தேடுபவர்கள். அவர்களுக்கு ஆசை, துக்கம் எதுவுமே இல்லை.  
சி: அப்படி என்றால் இதுவள்ளவா சிறந்த வாழ்க்கை.

சித்தார்தர் என்றால் இலட்சியம் அனைத்தையும் அடைந்தவன் என்று பொருள். சித்தார்த்தர் பிட்சுக்களின் வாழ்க்கையை யோசித்துக்கொண்டு வரும் போது, ஒரு சேவகன் தேரினருகில் வந்து தங்களுக்கு ஆண் மகன் பிறந்திருக்கிறான் என்றானாம். அதை கேட்டவுடன் ராகுலன் என்றாராம், ராகுலன் என்றால் பாலி மொழியில் கைவிலங்கு என்று பொறுள். அதுவே அவரது மகனின் பெயராகவும் அமைந்துவிட்டது.  

பயணிப்போம், 
கிருஷ்ணப் பிரபு, 
சென்னை.

No comments: