Thursday, October 23, 2008

Buddha's birth place,Lumbini

லூம்பினி புத்தர் பிறந்த இடம் என்பதையும் மீறி, அவர் அங்கு செல்ல ஆசைப்பட்டதாலேயே துறவு செல்ல நேர்ந்தது. சாக்கிய மரபில் வந்த கோசல மன்னரான சுத்தோதனருக்கும், கோலிய மன்னரின் மகளான மஹா மாயா தேவிக்கும் சித்தார்தர் பிறந்தார். நீண்ட நாட்களாக கருத்தரிக்காமலிருந்த மாயா தேவி பல பூஜைகள் செய்து, வரம் வாங்கி இவரை பெற்றாராம். நீண்ட நாள் கழித்து கருத்தரித்ததால் மாயாதேவி தாயார் வீட்டிற்கு சென்று குழந்தை பெற விரும்பினாலாம். அப்படியே அவள் தேவதாஹத்தை நோக்கி செல்லும் போது லூம்பினி என்ற இடத்திலுள்ள பூஞ்சோலையில் தங்கிச் செல்ல ஆசைப்பட்டாலாம். நல்ல வைசாக பவுர்ணமி நாளில் சால மரத்திலுள்ள பூவை பறிக்க ஆசைப்பட்டு மாயா செல்லும் போது சித்தார்தர் பிறந்தாராம்.  கி.மு 250 களில் புனித புத்த ஸ்தலங்களுக்கு மௌரிய மன்னன் அசோகன் பயணம் செல்லும் போது, இந்த இடத்தை அடையாலம் கண்டு ஒரு ஸ்தூபியை நிறுவி, வரி விலக்கு போன்ற சலுகைகளை இந்த இடத்திற்கு வழங்கினானாம். ஜெர்மானிய ஆரய்ச்சியாளர் நேபாள காடுகளில் பயணம் செய்யும் போது இதை கண்டுபிடித்து உலகுக்கு சென்னாராம்.

சித்தார்தருக்கு பெயர் வைக்கும் வைபவத்தில் 8 அந்தனர்கள் அழைக்கப்பட்டார்களாம். அவர்கள் 8 பேரும் இவன் பிற்காலத்தில் ஒன்று உலகையே ஆளும் அரசனாவான், இல்லையேல் துறவு பூண்டு மகானாவான் என்றார்களாம். அதுமுதல் சுத்தோதனர் இவரை துன்பமே தெரியாமல் வளர்க்க நினைத்தாராம். ஒரு சூழ்நிலையில் சித்தார்தருக்கு அரண்மனையை விட்டு வெளியில் செல்ல ஆசை வந்ததாம். அரசரும் சித்தார்தர் செல்லும் வழி முழுவதும் தோரணங்கள் கட்டி தெருவையே திருவிழா போல் மாற்றச்சொன்னாராம். தினமும் இவ்வழியாக மட்டுமே செல்லவேண்டுமென தேரோட்டிசந்தனனுக்கு ஆணை பிறப்பித்தாராம். சந்தனனும் அது போலவே செய்தானாம்.

யணிப்போம்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.

No comments: