பீவா லேக் நேபாளிலுள்ள இரண்டாவது மிகப்பெரிய ஏரி. இங்கு படகு சவாரி செய்துகொண்டு அன்னபூர்ணா சிகரத்தை பார்பது மிகவும் அழகாக இருக்கும். நிறைய படகுகள் சவாரி செய்ய கிடைக்கின்றன. இந்த ஏரியின் நடுவில் பராகி கோவில் உள்ளது. படடு மூலமாக அங்கு சென்று அம்மனை வழிபடலாம். கோவிலுக்கு செல்பவர்கள் மீன்களுக்கு இறை போடுகிறார்கள். பெரிய பெரிய மீன்கள் இறையெடுக்க வருகின்றன.இந்த ஏரியை ஒட்டியே நிறைய தங்கி செல்லும் விடுதிகள் இருக்கின்றன. இரு குழுக்கள் ஒன்றாக சென்றதால் ஒரு குழு Hotel moon Light-லும், மற்றொரு குழு Hotel lakeside-லும் தங்கியிருந்தோம். ஒரு நாள் தங்குவதற்கு ஏற்ற இடமாகத்தான் இருந்தது.
போக்ராவில் நிறைய Restaurant இருக்கின்றன. இரவு நேரங்களில் இங்கு நேபாள பாரம்பரிய நடனம் ஆடுகிறார்கள். பார்ப்பதற்கும் கேட்பதற்கும் இனிமையாக இருக்கிறது. இந்த நடனம் பலருக்கு பகுதி நேர வேலையாக இருக்கிறது. பல மாணவர்கள் மாலை நேரங்களில் இது போன்ற தங்கும் விடுதிகளில் ஏதோ ஒரு வேலை செய்து பிழைக்கிறார்கள்.
இந்த நடனத்தை தடை செய்யப்போவதாகவும், அப்படி செய்வதால் பாதிக்கப்படுபவர்களுக்காக ஒரு பெண் குரல் கொடுத்ததையும் நாளேடுகளில் படித்தேன்.
இங்கு மூலிகை மசாஜ் பல இடங்களிலும் செய்கிறார்கள். பல வெளிநாட்டவர்கள் மசாஜ் செய்து கொள்கிறார்கள். எனக்கு கழுத்தில் சுளுக்கு இருந்ததால் மசாஜ் செய்துகொள்ளலாம் என்று வினோத்தும் நானும் சென்று விசாரித்தோம். நேரமின்மையால் வந்துவிட்டோம்.
You tube link: http://in.youtube.com/watch?v=EGcF52pXlN0
You tube link: http://in.youtube.com/watch?v=EGcF52pXlN0
பயணிப்போம்,
கிருஷ்ணப் பிரபு,
சென்னை.
No comments:
Post a Comment