Tuesday, October 21, 2008

Allahabad Fort, akbar fort, yamuna river

அக்பரால் கட்டப்பட்ட பெரிய கோட்டைகளுள் அலகாபாத் கோட்டையும் ஒன்று. இது 1853-ல் அக்பரால் கட்டப்பட்டது. யமுனா நதிக்கரையின் பக்கத்திலேயே இந்த கோட்டை கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டையின் பெரும் பகுதி ரானுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோட்டையின் ஒரு சில பகுதிகளை ஆற்றினை ஒட்டிய நுழைவாயிலின் வழியாக பார்க்க மக்கள் அநுமதிக்கப்படுகிறார்கள். நுழைவுக்கட்டணமாக சிறிது வசூலிக்கிறார்கள் ஆனால் புகைப்படம் எடுக்க அநுமதியில்லை.

கோட்டையின் மதில் சுவர்களில் சில செடிகள் காணக்கிடைக்கின்றன. இது கோட்டையின் ஆயுளை குறைக்க வழியுள்ளது. ராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த நிலை ஆச்சர்யத்திற்குறியது. பல நூறு வருடஙகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்ட இதுபோன்ற கட்டிடங்கள் சிதைவதை வேடிக்கை பார்ப்பது இந்திய வரலாற்றின் சிதைவை பார்பதற்க்கு சமம்.

இந்த கோட்டையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அநுமன் கோவில் உள்ளது. இங்கு அநுமன் படுத்த நிலையில் காணக்கிடைக்கிறார். அதைத் தொடர்ந்து சென்றால் ராம, லட்சுமண, சீதை காட்சி தருகிறார்கள்.

இங்கிருந்து பார்த்தால் சங்கர மடத்திற்கு சொந்தமான கட்டிடம் தெரிகிறது. நேரமின்மையால் அங்கு செல்லாமல் தங்கியிருந்த இடத்திற்கு திரும்பவேண்டியதாக இருந்தது. 

பயணிப்போம்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.

No comments: