Thursday, October 23, 2008

Butwal - Nepal

இன்று(28-09-2008) காலையில் எழுந்து என் அறையில் முதல் ஆலாக தயாராகி இருந்தேன். அனைவரும் தயாராவதற்குள் வந்துவிடலாம் என்று சிறிது தூரம் வெளியில் சென்றேன். சரியாக காலை 5.15 மணி இருக்கும் நேபாள காவலாட்கள் அந்த நேரத்தில் சுற்றிக்கொண்டு இருந்தார்கள். சிறுவர்கள் சிலர் ஓட்டப்பயிற்சி செய்துகொண்டு இருந்தனர்.  
இன்று உலக சுற்றுலா தினம் என்பதால், குறிப்பாக நேபாள் சுற்றுலா தளம் என்பதால் சிறப்பாக கொண்டாடுவார்கள் என்று ஒரு சிந்தனை இருந்தது. நான் வெளியில் சென்று வருவதற்குள் எல்லோரும் தயாராக இருந்தார்கள். இன்று காலை நான் எதுவும் சாப்பிடவில்லை. மற்ற அனைவரும் சாப்பிட்டு தயாராக இருந்த வேலையில் இன்று முழுவதும் சாலை மறியல் வண்டிகள் ஓடாது என்று டூர் மேனேஜர் தெரிவித்தார். இங்கும் ஒரு சலசலப்பு எழுந்தது. ஆண்கள் மட்டுமென்றால் பரவாயில்லை, உடன் பெண்களும் வந்திருந்ததால் அவர்கள் வெளியில் அமர்ந்துகொள்ள வசதியில்லாமல் இருந்தது. சண்டை போட்டு மதியம் வரை அவர்கள் உபயோகப்படுத்த வசதி செய்து கொடுத்தார்கள். மதியம் வேறிடத்தில் வாடகைக்கு இடம் பார்த்து எங்களை அழைத்து சென்றார்கள். சொனாலியிலிருந்து 20 கிமீ தொலைவில் தான் லூம்பினி இருக்கிறது. அங்கு சென்று வர ஏதாவது வழி இருக்குமா என்று நான் தனிப்பட்ட முறையில் எத்தனை முறை விசாரித்தும் பலனில்லாமல் போனது.

யணிப்போம்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.

No comments: