என் அக்கா (ஹேமா) என்னுடன் ஒரு நாள் பேசிக்கொண்டு இருக்கும்பொழுது, வாழ்கைல ஒரு முறையாவது இமயமலை சென்று வரனும்டான்னு சொல்லி ஒரு சின்ன தீய பற்ற வச்சிட்டாள். அவள் முக்கியமாக என்னிடம் பேசியது முனிவர்கள் வாழும் இமயமலை பற்றியது.அதிலிருந்து வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்று வரவேண்டுமென்ற ஆசை நீண்ட நாட்களாக எனக்குள் இருந்தது.
இந்து மதத்தின் வேத, இதிகாசங்களில் வடஇந்தியாவிலுள்ள பல இடங்களை பற்றிய குறிப்புகள் உள்ளன. எனவே வடஇந்தியா சென்று வரலாமென்ற யோசனை இருந்தது.
அக்கா வேலை அது-இது என்று விடுப்பு எடுக்க முடியாமல் பம்பரமா சுத்த ஆரம்பிச்சிட்டாள்!... பிறகு அதபத்தி பேச்சே எடுக்கல. இப்படி இருக்கும்பொழுது நண்பன் வினோத், ஒரு நாள் தொலைபேசியில் என்னிடம் வடஇந்தியா சுற்றுலா செல்ல இருப்பதாக தெரிவித்தான். அதனுடன் நீயும் வருகிறாயா என்று கேட்டுக்கொண்டான்.
நான் யோசிச்சிட்டு சொல்றதா சொல்லி, எதுக்கும் tour plan அனுப்புடா பாத்துட்டு சொல்றேன்னு சொல்லி இருந்தேன்.
Tour Plan -ல் திருவேணி சங்கமம், அயோத்யா, ராமஜென்ம பூமி, புத்தர் பிறந்த லூம்ம்னி, மனக்கமானா தேவி கோவில், பசுபதிநாதர் கோவில், எவரஸ்ட் பயணம், புத்த கயா, காசி விஸ்வநாதர் கோவில், கங்கை நீராடல் என 12 நாள் சுற்றுலாவாக பட்டியல் நீண்டது. இது போதாதா, சரி நானும் வரன்டா... எவ்வளவு பணம் தேவைப்படும்னு கேட்டேன்.
Travellers-க்கு 9500 ரூபாய் மூன்று தவனையில் கொடுத்துட்டா, 12 நாள் சுற்றுலாவில் தங்குமிடம், சாப்பாடு , பயணம் செய்யும் பேருந்து என எல்லாம் அவஙகளே பாத்துக்குவாங்கன்னு சொன்னான்.
ஆஷான்னு சொல்லி கைய தூக்கிட்டேன். இது நடந்தது 2008 மே மாதம் இருக்கும் ஆனா நாங்க புறப்படபோறது செப்டம்பர் கடைசியிலதான்னு சொன்னாங்க. எதுக்கும் இருக்கட்டும்னு சொல்லி அப்பவே Office-ல permission வாங்கிட்டேன். சரியாக அக்டோபர் 24-ம் தேதி மதியம் 3.50மணிக்கு எங்கள் சுற்றுளா குழு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.
பயணிப்போம்
கிருஷ்ண பிரபு,
சென்னை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment